சரிவர பணிக்கு வராமல் இருந்த பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் தற்காலிக பணியிடை நீக்கம் - கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த மருத்துவர் கலைச்செல்வி சரிவர மருத்துவமனைக்கு வருவதில்லை என்ற தொடர் புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டதால், அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.



கோவை: பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளராக மருத்துவர் கலைச்செல்வி பணியாற்றி வந்தார். இவர் சரிவர மருத்துவமனைக்கு வருவதில்லை எனவும் மருத்துவமனை பணிகளையும் கவனிக்காமல் உள்ளதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று பொள்ளாச்சி பகுதியில் சரக்கு ஆட்டோ மற்றும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில், இருவர் பலியான நிலையில், பேருந்தில் பயணித்த பயணிகள் காயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க கோவை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் அமீரன் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவமனைக்கு சரியாக வருவதில்லை என வந்த புகார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், புகார் உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கலைச்செல்வியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...