கோவையில் சக ஊழியரை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் ஜெயராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றவாளிக்கு ஆயுள் மற்றும் 2,500 அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.



கோவை: கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை சுல்தான்பேட்டை அடுத்த பூசாரிபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது தோட்டத்தில் காங்கிரீட் வளையம் அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணிக்காக மதுரையை சேர்ந்த ஶ்ரீகண்டன், ஜெயராஜ், மகுடீஸ்வரன் ஆகியோர் தோட்டத்தில் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.

அப்போது, ஶ்ரீகண்டன் மற்றும் ஜெயராஜ் இருவரும் அறையில் தங்கியிருந்த போது இரவு ஜெயராஜ் ரேடியோவை சத்தமாக வைத்து பாடல் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஶ்ரீகண்டன் ரேடியோவை இரும்பு கம்பியால் அடித்து உடைத்து, ஜெயராஜையும் தாக்கியுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெயராஜ் கருங்கல்லை எடுத்து ஶ்ரீகண்டன் மீது போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று விசாரணை நிறைவடைந்த நிலையில், ஜெயராஜ் குற்றவாளி என்றும், அவருக்கு ஆயுள் மற்றும் 2,500 அபராதம் விதித்து நீதிபதி பாலு உத்தரவிட்டார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...