துடியலூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான முகமது ரஃபீக் (31) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர் என்பதும் இவருடன் பெட்ரோல் குண்டு வீச வந்த மற்றொரு நபரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட முகமது ரஃபீக்கை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் துடியலூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் கடந்த 22 ஆம் தேதி அடுத்தடுத்து பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு மற்றும் கல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவை ரத்தினபுரியை சேர்ந்த பாஜக நிர்வாகி மோகன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிகல் கடை 100 அடி சாலையில் அமைந்துள்ளது.

இந்த கடையின் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் பாஜக நிர்வாகி மோகன் கடைமீது பெட்ரோல் குண்டு வீசிய துடியலூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முகமது ரஃபீக் (31) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
மேலும், விசாரணையில் இவர் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர் என்பதும் இவருடன் பெட்ரோல் குண்டு வீச வந்த மற்றொரு நபரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட முகமது ரஃபீக்கை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவையில் கடந்த 22 ஆம் தேதி அடுத்தடுத்து பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு மற்றும் கல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவை ரத்தினபுரியை சேர்ந்த பாஜக நிர்வாகி மோகன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிகல் கடை 100 அடி சாலையில் அமைந்துள்ளது.
இந்த கடையின் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் பாஜக நிர்வாகி மோகன் கடைமீது பெட்ரோல் குண்டு வீசிய துடியலூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முகமது ரஃபீக் (31) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
மேலும், விசாரணையில் இவர் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர் என்பதும் இவருடன் பெட்ரோல் குண்டு வீச வந்த மற்றொரு நபரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட முகமது ரஃபீக்கை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.