நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக் மீண்டும் தேர்வு - தலைமை கழகம் அறிவிப்பு

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குறித்த பட்டியலில், நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்ட திமுகவின் செயலாளராக பா.மு.முபாரக் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதில், திமுகவின் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், நீலகிரி மாவட்ட திமுகவுக்கு செயலாளர் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக், அவைத்தலைவராக கே.போஜன், துணை செயலாளர்களாக ரவிகுமார், தமிழ்செல்வன், லட்சுமி மற்றும் பொருளாளராக நாசர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக இளங்கோவன், ராஜூ, முஸ்தபா, செந்தில் ரங்கராஜன், திராவிட மணி, காசிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, அமிர்தலிங்கம், காளிதாஸ், மோகன்குமார், செல்வம், வீரபத்திரன், பில்லன், தொரை, சதக்கத்துல்லா, ராஜேந்திரன், கருப்பையா, உதயதேவன், ஷீலா கேத்ரின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், ஊட்டி வடக்கு - காமராஜ், தெற்கு - பரமசிவன், மேலூர் - லாரன்ஸ், கூடலூர் - லியாகத் அலி, பந்தலூர் கிழக்கு - சுஜேஷ், மேற்கு - சிவானந்தராஜா, குன்னூர் - பிரேம்குமார், கோத்தகிரி - நெல்லை கண்ணன், கீழ்கோத்தகிரி - பீமன்.

ஊட்டி - ஜார்ஜ், கூடலூர் - இளஞ்செழியன், நெல்லியாளம் - சேகர் என்ற சேகரன், குன்னூர் - ராமசாமி, நடுவட்டம் - உதயகுமார், சோலூர் - பிரகாஷ்குமார், பிக்கட்டி - நடராஜன், கீழ்குந்தா - சதீஷ்குமார், கேத்தி - சுந்தர்ராஜ்.

அதிகரட்டி - முத்து, தேவர்சோலை - சுப்ரமணி, ஓவேலி - செல்வரத்தினம், உலிக்கல் - ரமேஸ்குமார், ஜெகதளா - சஞ்சீவ்குமார், கோத்தகிரி - பி.காளிதாஸ், கண்டோன்மெண்ட் நகரியம் - மார்ட்டின்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...