வேண்டுமென்றே கோவையில் தற்போது உள்ள சூழ்நிலை பயன்படுத்தி வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் மர்ம நபர்கள் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினர். மேலும், எஸ்டிபிஐ கட்சி பெயரை வைத்து இந்த கடிதம் பரவுவதை தடுக்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தில், பொள்ளாச்சி குமரன் நகரில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு, மற்றும் கையெரி குண்டு வீசப்படும் எனவும், சட்டம் ஒழுங்கு பாதுகாத்துக் கொள்ளவும் என்ற கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், சர்ச்சையை கிளப்பும் விதமாக அந்த கடிதத்தில் குமரன் நகர் எஸ்டிபிஐ என குறிப்பிட்டு இருந்தது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானதோடு, செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், எஸ்டிபிஐ கோவை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் இக்பால் தலைமையில் எஸ்டிபிஐ கட்சியினர் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று விளக்க மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்திற்கும், எஸ்டிபிஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். வேண்டுமென்றே கோவையில் தற்போது உள்ள சூழ்நிலை பயன்படுத்தி வீண் குழப்பத்தை மற்றும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கில் மர்ம நபர்கள் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.
மேலும், எஸ்டிபிஐ கட்சி பெயரை வைத்து இந்த கடிதம் பரவுவதை தடுக்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மண்டல தலைவர் ராஜா உசேன், மாவட்ட தலைவர் முஸ்தபா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாதிக் அபுதாஹிர் ஆகியோர் மனு அளிக்க வந்திருந்தனர்.
மேலும், சர்ச்சையை கிளப்பும் விதமாக அந்த கடிதத்தில் குமரன் நகர் எஸ்டிபிஐ என குறிப்பிட்டு இருந்தது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானதோடு, செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், எஸ்டிபிஐ கோவை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் இக்பால் தலைமையில் எஸ்டிபிஐ கட்சியினர் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று விளக்க மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்திற்கும், எஸ்டிபிஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். வேண்டுமென்றே கோவையில் தற்போது உள்ள சூழ்நிலை பயன்படுத்தி வீண் குழப்பத்தை மற்றும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கில் மர்ம நபர்கள் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.
மேலும், எஸ்டிபிஐ கட்சி பெயரை வைத்து இந்த கடிதம் பரவுவதை தடுக்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மண்டல தலைவர் ராஜா உசேன், மாவட்ட தலைவர் முஸ்தபா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாதிக் அபுதாஹிர் ஆகியோர் மனு அளிக்க வந்திருந்தனர்.