சேலம் மற்றும் நாமக்கல்லில் நிதிநிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட குருசாமி என்பவருக்கு இரண்டு வழக்குகளிலும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
கோவை: நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடியில் ஈடுபட்ட குருசாமி என்பவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சக்தி நகரை சேர்ந்தவர் குருசாமி(40). இவர் சுசி ஈமு பார்ம் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில், நாமக்கல்லில் நிதி நிறுவனம் ஒன்றைநடத்தி வந்தார்.
இந்த நிதி நிறுவனத்தின் மூலம் 96 பேரிடம் சுமார் 2.39 கோடி ரூபாய் வரைமுதலீடு பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில், நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை 2.40 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல், சேலத்தில் ஈமு நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கிலும், கடந்தாண்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்கிலும் தண்டனை அறிவிக்கப்பட்ட போது, குருசாமி நீதிமன்றத்தில்ஆஜராகததால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த குருசாமியை, நாமக்கல் மற்றும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இதனிடையே கோவை 'டான்பிட்' நீதிமன்றத்தில் குருசாமி நேற்றைய தினம் (28.09.2022)சரணடைந்தார். இதனையடுத்து அவர் நீதிபதி ரவி உத்தரவின்படி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சக்தி நகரை சேர்ந்தவர் குருசாமி(40). இவர் சுசி ஈமு பார்ம் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில், நாமக்கல்லில் நிதி நிறுவனம் ஒன்றைநடத்தி வந்தார்.
இந்த நிதி நிறுவனத்தின் மூலம் 96 பேரிடம் சுமார் 2.39 கோடி ரூபாய் வரைமுதலீடு பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில், நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை 2.40 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல், சேலத்தில் ஈமு நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கிலும், கடந்தாண்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்கிலும் தண்டனை அறிவிக்கப்பட்ட போது, குருசாமி நீதிமன்றத்தில்ஆஜராகததால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த குருசாமியை, நாமக்கல் மற்றும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இதனிடையே கோவை 'டான்பிட்' நீதிமன்றத்தில் குருசாமி நேற்றைய தினம் (28.09.2022)சரணடைந்தார். இதனையடுத்து அவர் நீதிபதி ரவி உத்தரவின்படி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.