பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும் என்று அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என கோவை மேற்கு காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் பாஜக மற்றும்இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல்குண்டு மற்றும் கற்கள் எறிப்பட்டன. மேலும், சில இடங்களில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. தொடர்ந்து, நடைபெற்ற இச்சம்பவங்களால், கோவை மாநகரில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வந்தன.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகேயுள்ள குமரன் நகர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள், தீவைக்கமுயற்சி செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட, தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த ஆறு பேரை மேற்கு காவல் நிலையபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு மர்ம நபர்கள் மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும் என்றும், காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்றும் இறுதியாக SDPI, PFI என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காவல் நிலையத்திற்கு வந்த இந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,கடிதத்தைஅனுப்பிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் பாஜக மற்றும்இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல்குண்டு மற்றும் கற்கள் எறிப்பட்டன. மேலும், சில இடங்களில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. தொடர்ந்து, நடைபெற்ற இச்சம்பவங்களால், கோவை மாநகரில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வந்தன.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகேயுள்ள குமரன் நகர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள், தீவைக்கமுயற்சி செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட, தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த ஆறு பேரை மேற்கு காவல் நிலையபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு மர்ம நபர்கள் மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும் என்றும், காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்றும் இறுதியாக SDPI, PFI என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காவல் நிலையத்திற்கு வந்த இந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,கடிதத்தைஅனுப்பிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.