கிணத்துக்கடவு அருகே மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

தாமரைக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென மூலப்பொருள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. மள மளவென தீ பரவியதால், அங்கு வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் மற்றும் மூலப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.


கோவை: கிணத்துக்கடவு அருகே தனியார் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரித்து சேதமடைந்துள்ளது.



கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 20- க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில், புதிதாக தயாரிக்கப்பட்ட மெத்தைகள் மற்றும் மெத்தைகள் தயாரிக்க தேவையான மூலப்பொருள் வைக்கபட்டிருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலைமூலப்பொருள் வைத்திருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.மள மளவென தீ பரவியதால், அங்கு வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் மற்றும்மூலப் பொருட்கள் அனைத்தும்எரிந்து சேதமானது.



தகவலின் பெயரில் விரைந்து வந்த பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரித்து சேதமானதாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...