கிணத்துக்கடவு அருகே மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

தாமரைக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென மூலப்பொருள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. மள மளவென தீ பரவியதால், அங்கு வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் மற்றும் மூலப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.


கோவை: கிணத்துக்கடவு அருகே தனியார் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரித்து சேதமடைந்துள்ளது.



கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 20- க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில், புதிதாக தயாரிக்கப்பட்ட மெத்தைகள் மற்றும் மெத்தைகள் தயாரிக்க தேவையான மூலப்பொருள் வைக்கபட்டிருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலைமூலப்பொருள் வைத்திருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.மள மளவென தீ பரவியதால், அங்கு வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் மற்றும்மூலப் பொருட்கள் அனைத்தும்எரிந்து சேதமானது.



தகவலின் பெயரில் விரைந்து வந்த பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரித்து சேதமானதாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...