வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்ன முருகன் உடல் நலம் குறித்து விசாரித்த நகர்மன்ற தலைவர், எஸ். அழகு சுந்தரவள்ளி செல்வம் அவருக்கு நிவாரண தொகையை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
கோவை: வால்பாறை அருகேயுள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் 44வது டிவிசன் தேயிலை தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த சின்னமுருகன் (52) என்பவரை சிறுத்தை தாக்கியது.
சிறுத்தை உடல் முழுவதும் நகங்களால் கிரியதால், அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சக உழியர்கள், காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்ன முருகன் உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று நகர்மன்ற தலைவர், எஸ். அழகு சுந்தரவள்ளி செல்வம் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

சிகிச்சை பெற்று வரும் சின்ன முருகன் உடல்நலம் குறித்து விசாரித்த நகர்மன்ற தலைவர் அவரிடம் நிவாரண தொகையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, நகரமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், இரா.சே அன்பரசன், ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
சிறுத்தை உடல் முழுவதும் நகங்களால் கிரியதால், அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சக உழியர்கள், காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்ன முருகன் உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று நகர்மன்ற தலைவர், எஸ். அழகு சுந்தரவள்ளி செல்வம் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
சிகிச்சை பெற்று வரும் சின்ன முருகன் உடல்நலம் குறித்து விசாரித்த நகர்மன்ற தலைவர் அவரிடம் நிவாரண தொகையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, நகரமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், இரா.சே அன்பரசன், ஆகியோர்கள் உடன் இருந்தனர்.