கோவை வடக்கு மண்டலத்தில் 48.97 மழைநீர் வடிகால், ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும் பணிகளை மேயர் துவக்கி வைத்தார்

வடக்கு மண்டலத்தில் ரூபாய் 48.97 இலட்சம்‌ மதிப்பீட்டிலான புதிதாக மழைநீர்‌ வடிகால்‌ கட்டும்‌ பணி மற்றும்‌ புதுப்பித்தல்‌ பணி, புதிய ஆழ்குழாய்‌ கிணறு அமைப்பதற்கான வளர்ச்சிப் பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில்‌ பல்வேறு கட்டுமான மற்றும் வளர்ச்சி பணிகளை மேயர் இன்று துவக்கம் வைத்தார்.

அதன்படி, வடக்கு மண்டலத்தில் ரூபாய் 48.97 இலட்சம்‌ மதிப்பீட்டிலான புதிதாக மழைநீர்‌ வடிகால்‌ கட்டும்‌ பணி மற்றும்‌ புதுப்பித்தல்‌ பணி, புதிய ஆழ்குழாய்‌ கிணறு அமைப்பதற்கான வளர்ச்சிப் பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.29க்குட்பட்ட அப்பநாயுடுூ வீதியில்‌ உள்ள மழை நீர் வடிகாலை நேரில்‌ ஆய்வு செய்து, மழைநீர் வடிகாலில்‌ தேங்கியுள்ள குப்பைகள்‌, செடி, கொடிகளை தூர்வாரி சுத்தம்‌ செய்து மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

வார்டு 29

பின்னா்‌, வார்டு எண்‌.29க்குட்பட்ட காந்தி நகர் 2வது வீதியில்‌ ரூ.4.98 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, டீச்சாஸ்‌ காலனி 3வது வீதியில்‌ ரூ.4.99 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌ புதிதாக மழைநீர்‌‌ வடிகால்கள்‌ கட்டும்‌ பணியினை துவக்கி வைத்தார்.

வார்டு 15



வார்டு எண்‌.15க்குட்பட்ட கே.என்‌.ஜி.புதார்‌, ஆறுமுகா நகா்‌ பகுதியில்‌ ரூ.7.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிய ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும்‌ ஒனுகள் துவக்கி வைப்பு.

வார்டு 14



வார்டு எண்‌.14க்குட்பட்ட வெள்ளக்கிணறு பிரிவில்‌ ரூ.7.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிய ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும்‌ பணியினையும்‌, வெள்ளக்கிணறு பிரிவு, திருவள்ளுவர்‌ நகரில்‌ ரூ.24 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பழுதடைந்துள்ள மழைநீர் வடிகால்‌ புதுப்பித்தல்‌ பணி துவக்கம் வாய்ப்பு.

மொத்தம்‌ ரூ.48.97 லட்சம்‌ மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து, பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



பின்னர், ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ வெறிநோய்‌ தடுப்பூசி முகாம்‌ மற்றும்‌ உலக வெறிநோய்‌ தினம்‌ - 2022க்கான விழிப்புணர்வு பேரணியையும், அதே போல மத்திய மண்டலம்‌ பகுதியில்‌ வெறிநோய்‌ தடுப்பூசி முகாம்‌ மற்றும்‌ சுமார்‌ 2.8 கி.மீ. தொலைவிற்கு உலக வெறிநோய்‌ தினம்‌ - 2022க்கான விழிப்புணா்வு பேரணியை மேயர் கல்பனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில்‌ மண்டல தலைவர் வே.கதிர்வேல்‌ (வடக்கு), மீனாலோகு (மத்தியம்‌), இலக்குமி இளஞ்செல்விகாரத்திக்‌ (கிழக்கு), பணிகள்‌ குழு தலைவர்‌, சாந்தி முருகன்‌, பொதுசுகாதாரக்‌ குழுத்தலைவர்‌ பெ.மாரிச்செல்வன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, வ.உ.சி.உயிரியல்‌ பூங்கா இயக்குனர் ஏ.செந்தில்நாதன்‌, உதவி ஆணையாரகள்‌ என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...