குடிபோதையில் வறண்ட கிணற்றில் கை கழுவுவதற்காக சென்ற தனியார் நிறுவன ஊழியர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: துடியலூர் அருகே குடிபோதையில் வறண்ட கிணற்றில் கை கழுவுவதற்காக சென்ற தனியார் நிறுவன ஊழியர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துடியலூர் அடுத்த நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் ஜகுகாரியா (42). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், அளவுக்கு அதிகமாக மது அருந்திய அவர், கைகளை கழுவுவதற்காக அருகில் உள்ள வறண்ட கிணற்றின் அருகே சென்றார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துடியலூர் அடுத்த நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் ஜகுகாரியா (42). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், அளவுக்கு அதிகமாக மது அருந்திய அவர், கைகளை கழுவுவதற்காக அருகில் உள்ள வறண்ட கிணற்றின் அருகே சென்றார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.