கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கடந்த 2021 ஆம் ஆண்டு, கோவை தடாகம் பகுதியில் குடிபோதையில் ஒருவரை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த வெள்ளிங்கிரி (52) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.


கோவை: கோவை தடாகம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கந்தசாமி என்பவரது மகன் வெள்ளிங்கிரி (52), என்பவர் குடிபோதையில் கடந்த 01.03.2021 -ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் (25) என்பவரை மரக்கட்டையால் அடித்து கொலை செய்தார்.

இந்த குற்றத்திற்காக, தடாகம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரால் வெள்ளிங்கிரி (52) மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை கோவை மாவட்டம் கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று (28.09.2022) வெள்ளிங்கிரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் (1158 )தமிழரசன் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெகுவாக பாராட்டினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...