பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை: கோவையில் பதற்றமான பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பெருவாரியாக வசிக்கும் உக்கடம் மற்றும் கோட்டைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் அது மெல்ல மெல்ல தணிந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

இதன காரணமாக இஸ்லாமியர்கள் பெருவாரியாக வசிக்கும் உக்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்துக்கு மாறான சூழல் காணப்படுகிறது. குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் அமைந்திருக்கும் கோட்டைமேடு பகுதியில் போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டு உள்ளனர்.



கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை ஆணையர் மாதவன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், கோவை மாநகர் முழுவதும் சுழற்சி முறையில் 24 மணி நேரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவையில் பதற்றம் மிகுந்த பகுதிகளில் ஒரு காவல் நிலையத்துக்கு ஒரு எஸ்.பி. என்ற அடிப்படையில் 6 எஸ்.பி.க்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 27 வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது மத்திய அரசு அரசால் போடப்பட்ட தடையை கண்டித்து இன்று கோட்டைமேடு பகுதியில் இஸ்லாமிய பெண்கள் கோஷங்களை எழுப்பி சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், தடை செய்யப்பட்ட பி எஃப் ஐ அமைப்பு போராட்டம் நடத்தவோ அல்லது பி எஃப் ஐ அலுவலக பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூடவோ கூடாது என்று போலீசார் ஒலிபெருக்கியில் அறிவித்துபோராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கலைத்தனர்.

இந்த நிலையில் சமூக வலைதளம், பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் விவாதிக்கும், ஒன்று கூடும் தளங்கள் போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...