காயச்சல் காரணமாக நேற்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில், எச்1என்1 இன்புளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: காய்ச்சல் காரணமாகமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குஎச்1என்1 இன்புளுயன்சா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று (27.09.2022) அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில்சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டனர். அதில், அவருக்கு எச்1என்1 வகை இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகஅவர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்செய்தியாளர்களிடம் பேசியதாவது, பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு இன்யுளூயன்சா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, தனிமையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் வீடு திரும்புவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று (27.09.2022) அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில்சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டனர். அதில், அவருக்கு எச்1என்1 வகை இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகஅவர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்செய்தியாளர்களிடம் பேசியதாவது, பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு இன்யுளூயன்சா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, தனிமையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் வீடு திரும்புவார்.
இவ்வாறு அவர் கூறினார்.