வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தீபா, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு, டிக்கெட் கட்டணம் ரூ.620-ஐ திருப்பி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கோவை: கோவையில் முன்பதிவு செய்த டிக்கெட் தொலைந்து விட்டதால், பயணியை பேருந்தில் ஏற்ற மறுத்ததால் இழப்பீடு, வழக்கு செலவு மற்றும் டிக்கெட் கட்டணம் என மொத்தம் ரூ.6,620 வழங்க திருப்பூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை அருகேயுள்ள பட்டணம்புதுாரை சேர்ந்தவர் நிவாஷ். இவர், தனது மனைவியுடன், கோவையில் இருந்து புதுச்சேரி செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 620 ரூபாய் கட்டணம் செலுத்தி இரண்டு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
பயண தேதியான 2017, மார்ச் 28ல், காந்திபுரத்தில் பேருந்தில் ஏற சென்ற போது, முன்பதிவு செய்த டிக்கெட் தொலைந்து விட்டதால், காந்திபுரம் விரைவு பேருந்து நிலையம் மற்றும் டிக்கெட் வழங்கும் அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில், டிக்கெட் பிரதியை, வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்து வைத்து இருந்தார். அதை காட்டி பயணம் செய்ய அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும், அசல் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வேறு வழியின்றி, புதிதாக இரண்டு டிக்கெட் எடுத்து அதே பஸ்சில் சென்றுள்ளனர். ஆனால், அவர் முன்பதிவு செய்த இருக்கை, புதுச்சேரி செல்லும் வரை காலியாகவே இருந்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நிவாஷ், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, திருப்பூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தீபா, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு, டிக்கெட் கட்டணம் ரூ.620-ஐ திருப்பி செலுத்த வேண்டும் உத்தரவிட்டார்.
மேலும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, ரூ.5,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.1,000 என மொத்தம் ரூ.6,620 வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கோவை அருகேயுள்ள பட்டணம்புதுாரை சேர்ந்தவர் நிவாஷ். இவர், தனது மனைவியுடன், கோவையில் இருந்து புதுச்சேரி செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 620 ரூபாய் கட்டணம் செலுத்தி இரண்டு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
பயண தேதியான 2017, மார்ச் 28ல், காந்திபுரத்தில் பேருந்தில் ஏற சென்ற போது, முன்பதிவு செய்த டிக்கெட் தொலைந்து விட்டதால், காந்திபுரம் விரைவு பேருந்து நிலையம் மற்றும் டிக்கெட் வழங்கும் அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில், டிக்கெட் பிரதியை, வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்து வைத்து இருந்தார். அதை காட்டி பயணம் செய்ய அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும், அசல் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வேறு வழியின்றி, புதிதாக இரண்டு டிக்கெட் எடுத்து அதே பஸ்சில் சென்றுள்ளனர். ஆனால், அவர் முன்பதிவு செய்த இருக்கை, புதுச்சேரி செல்லும் வரை காலியாகவே இருந்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நிவாஷ், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, திருப்பூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தீபா, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு, டிக்கெட் கட்டணம் ரூ.620-ஐ திருப்பி செலுத்த வேண்டும் உத்தரவிட்டார்.
மேலும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, ரூ.5,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.1,000 என மொத்தம் ரூ.6,620 வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.