விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் பொருத்தும் பணி தீவிரம் : துணை ஆணையர் சரவணன் தகவல்


கோவை மாநகரில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் பெருகி வரும் நிலையில், விபத்துக்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், விபத்துக்கள் நிகழ்வதை குறைக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகரப்பகுதிகளில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதி கண்டறியப்பட்டு அங்கு எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள், வேகத்தடை போன்றவைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது :- 

கோவை மாநகரில் அதிக விபத்துகள் நடக்கும் இடங்கள் எவை?  என்று கண்டறிந்து அப்பகுதிகளில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அமைக்க முடிவு செய்தோம். அதன்படி, அவினாசி சாலையில் மிக அதிக விபத்துகள் நடப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக விபத்துக்கள் நடப்பது கண்டறியப்பட்டது. தற்போது அப்பகுதிகளில் சாலை ஓரங்களில் 'எச்சரிக்கை, விபத்துப்பகுதி' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பொருத்தப்பட்டு வருகிறது. 

மேலும், குறிச்சி பகுதியில் வேகத்தடைகள் மற்றும் சாலையின் நடுவே டிவைடர்கள் அமைக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைவில் முடிவடையும். 

காவல் துறை சார்பில் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அதோடு, வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை முறையாக கடைபிடித்தால் விபத்துக்கள் வெகுவாக குறையும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...