விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் பொருத்தும் பணி தீவிரம் : துணை ஆணையர் சரவணன் தகவல்


கோவை மாநகரில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் பெருகி வரும் நிலையில், விபத்துக்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், விபத்துக்கள் நிகழ்வதை குறைக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகரப்பகுதிகளில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதி கண்டறியப்பட்டு அங்கு எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள், வேகத்தடை போன்றவைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது :- 

கோவை மாநகரில் அதிக விபத்துகள் நடக்கும் இடங்கள் எவை?  என்று கண்டறிந்து அப்பகுதிகளில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அமைக்க முடிவு செய்தோம். அதன்படி, அவினாசி சாலையில் மிக அதிக விபத்துகள் நடப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக விபத்துக்கள் நடப்பது கண்டறியப்பட்டது. தற்போது அப்பகுதிகளில் சாலை ஓரங்களில் 'எச்சரிக்கை, விபத்துப்பகுதி' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பொருத்தப்பட்டு வருகிறது. 

மேலும், குறிச்சி பகுதியில் வேகத்தடைகள் மற்றும் சாலையின் நடுவே டிவைடர்கள் அமைக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைவில் முடிவடையும். 

காவல் துறை சார்பில் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அதோடு, வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை முறையாக கடைபிடித்தால் விபத்துக்கள் வெகுவாக குறையும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...