கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 2வது வீதியை சேர்ந்தவர் ஆனந்த் (47). இவர் வடகோவை அருகே சாலையை கடக்க முற்பட்ட போது, அவர் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆனந்த் மீது அவ்வழியாக வந்த லாரி ஏரி விபத்து ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார்.
கோவை: கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 2வது வீதியை சேர்ந்தவர் ஆனந்த் -ஜெய் ஸ்ரீ தம்பதி. இதில், ஜெய் ஸ்ரீ (38), மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெண்கள் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராகவேலை பார்த்து வருகிறார்.
இன்று காலை, ஆனந்த் (47) தனது மனைவி பணிபுரியும் கல்லூரியில் அவரைப் பார்க்க சென்றுள்ளார். அப்போது, வடகோவை-மேட்டுப்பாளையம் சாலையை கடக்க முற்பட்டபோது, அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது.
இதில், நிலை தடுமாறி ஆனந்த் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஆனந்த மீது ஏறியது. இதில், படுகாயம் அடைந்த அவரை. உடனே, அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆனந்த் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இறந்த ஆனந்தின் மனைவி ஜெய் ஸ்ரீ, கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பைக் ஓட்டி வந்த டி.வி.எஸ். நகரை சேர்ந்த மதன் (25), கவுண்டம்பாளையம், லாரி டிரைவர் மோகன் (24) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவியை பார்க்க சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பேராசிரியரின் கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை, ஆனந்த் (47) தனது மனைவி பணிபுரியும் கல்லூரியில் அவரைப் பார்க்க சென்றுள்ளார். அப்போது, வடகோவை-மேட்டுப்பாளையம் சாலையை கடக்க முற்பட்டபோது, அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது.
இதில், நிலை தடுமாறி ஆனந்த் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஆனந்த மீது ஏறியது. இதில், படுகாயம் அடைந்த அவரை. உடனே, அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆனந்த் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இறந்த ஆனந்தின் மனைவி ஜெய் ஸ்ரீ, கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பைக் ஓட்டி வந்த டி.வி.எஸ். நகரை சேர்ந்த மதன் (25), கவுண்டம்பாளையம், லாரி டிரைவர் மோகன் (24) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவியை பார்க்க சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பேராசிரியரின் கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.