கோவை சாய்பாபா காலனி அருகே விபத்து: கல்லூரி பேராசிரியையின் கணவர் உயிரிழந்த சோகம்

கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 2வது வீதியை சேர்ந்தவர் ஆனந்த் (47). இவர் வடகோவை அருகே சாலையை கடக்க முற்பட்ட போது, அவர் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆனந்த் மீது அவ்வழியாக வந்த லாரி ஏரி விபத்து ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார்.


கோவை: கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 2வது வீதியை சேர்ந்தவர் ஆனந்த் -ஜெய் ஸ்ரீ தம்பதி. இதில், ஜெய் ஸ்ரீ (38), மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெண்கள் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராகவேலை பார்த்து வருகிறார்.

இன்று காலை, ஆனந்த் (47) தனது மனைவி பணிபுரியும் கல்லூரியில் அவரைப் பார்க்க சென்றுள்ளார். அப்போது, வடகோவை-மேட்டுப்பாளையம் சாலையை கடக்க முற்பட்டபோது, அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது.

இதில், நிலை தடுமாறி ஆனந்த் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஆனந்த மீது ஏறியது. இதில், படுகாயம் அடைந்த அவரை. உடனே, அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆனந்த் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இறந்த ஆனந்தின் மனைவி ஜெய் ஸ்ரீ, கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பைக் ஓட்டி வந்த டி.வி.எஸ். நகரை சேர்ந்த மதன் (25), கவுண்டம்பாளையம், லாரி டிரைவர் மோகன் (24) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவியை பார்க்க சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பேராசிரியரின் கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...