மேட்டுபாளையம் இந்து அமைப்பு நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு சம்பவம்: இந்து முன்னணி பிரமுகர் உட்பட இருவர் கைது; தனிப்படை போலீசார் நடவடிக்கை.

விநாயகர் சதுர்த்தியின் போது சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்து முன்னணியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த ஹரிஷ் என்பவரது கார் மீது கல் வீசி தாக்கியுள்ளனர். வழக்கில் தொடர்புடைய ஹரிஹரன் என்பவர் எந்த அமைப்பிலும் இல்லை - எஸ் பி.



கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் செயலாளராகஇருப்பவர் ஹரிஷ். நேற்று,மர்ம நபர்கள் இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட கார் மீது கல்வீசி தாக்கிவிட்டு தப்பினர்.

இது குறித்த வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இரவு 10 மணி அளவில்கோவைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செய்தியாளர்களைசந்தித்தார். அப்போது, இந்து இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த ஹரிஷ் என்பவரின் கார் கல்வீசி தாக்கப்பட்டது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகவும், சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகள் கண்டறியப்பட்டு விட்டனர் என தெரிவித்தார்.

அதன்படி, அதே பகுதியை சேர்ந்ததமிழ்செல்வன், ஹரிகரன் என்ற இருவர்கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவரும் குற்றவாளிகள் என்பது தெரியவந்ததாகவும் கூறினார்.

விநாயகர் சதுர்த்தியின் போது சிலை வைப்பது தொடர்பாக ஹரிஷ்க்கும் தமிழ்செல்வனுக்கும்மேற்பட்ட மோதல் காரணமாகவே ஹரிஷ் கார் மீது கல் வீசி தாக்கியுள்ளனர் எனவும் அவர்தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட தமிழ்செல்வன் இந்து முன்னணி அமைப்பின் உறுப்பினர் எனவும் அவருடன் கைது செய்யப்பட்ட ஹரிகரன் எந்த அமைப்பிலும் இல்லை என்று தெரிவித்த எஸ்.பி, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம்பகுதியில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாகவிசாரணை நடைபெற்று வருகிறது எனவும் விரைவில் அது தொடர்பான குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...