விநாயகர் சதுர்த்தியின் போது சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்து முன்னணியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த ஹரிஷ் என்பவரது கார் மீது கல் வீசி தாக்கியுள்ளனர். வழக்கில் தொடர்புடைய ஹரிஹரன் என்பவர் எந்த அமைப்பிலும் இல்லை - எஸ் பி.
கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் செயலாளராகஇருப்பவர் ஹரிஷ். நேற்று,மர்ம நபர்கள் இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட கார் மீது கல்வீசி தாக்கிவிட்டு தப்பினர்.
இது குறித்த வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இரவு 10 மணி அளவில்கோவைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செய்தியாளர்களைசந்தித்தார். அப்போது, இந்து இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த ஹரிஷ் என்பவரின் கார் கல்வீசி தாக்கப்பட்டது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகவும், சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகள் கண்டறியப்பட்டு விட்டனர் என தெரிவித்தார்.
அதன்படி, அதே பகுதியை சேர்ந்ததமிழ்செல்வன், ஹரிகரன் என்ற இருவர்கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவரும் குற்றவாளிகள் என்பது தெரியவந்ததாகவும் கூறினார்.
விநாயகர் சதுர்த்தியின் போது சிலை வைப்பது தொடர்பாக ஹரிஷ்க்கும் தமிழ்செல்வனுக்கும்மேற்பட்ட மோதல் காரணமாகவே ஹரிஷ் கார் மீது கல் வீசி தாக்கியுள்ளனர் எனவும் அவர்தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட தமிழ்செல்வன் இந்து முன்னணி அமைப்பின் உறுப்பினர் எனவும் அவருடன் கைது செய்யப்பட்ட ஹரிகரன் எந்த அமைப்பிலும் இல்லை என்று தெரிவித்த எஸ்.பி, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம்பகுதியில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாகவிசாரணை நடைபெற்று வருகிறது எனவும் விரைவில் அது தொடர்பான குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.