அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து தமிழக கேரள எல்லை பகுதியான நாடுகானி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில்கள்மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் எதிரொலியாகதமிழக - கேரளா எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக, இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கமாண்டோ படை வீரர்கள், அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டு கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கூடலூர் பகுதியில் உள்ள கேரள எல்லைகளான நாடுகானி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக வரும் நபர்களை விசாரித்து வருகின்றனர்.
ஒரு பேருந்தில், பயணிகளின் உடமைகளை சோதனை செய்தது குறித்து போலீசார் கூறும்போது, கூடலூர் பகுதியில் 3 தாசில்தார்கள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் சுழற்சி முறையில் வரும் 30ஆம் தேதி வரை பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளது.தொடர்ந்து வாகன சோதனையும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக, இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கமாண்டோ படை வீரர்கள், அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டு கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கூடலூர் பகுதியில் உள்ள கேரள எல்லைகளான நாடுகானி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக வரும் நபர்களை விசாரித்து வருகின்றனர்.
ஒரு பேருந்தில், பயணிகளின் உடமைகளை சோதனை செய்தது குறித்து போலீசார் கூறும்போது, கூடலூர் பகுதியில் 3 தாசில்தார்கள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் சுழற்சி முறையில் வரும் 30ஆம் தேதி வரை பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளது.தொடர்ந்து வாகன சோதனையும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.