மேட்டுப்பாளையம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்ட காடேஸ்வரா சுப்ரமணியன், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் தான் செய்திருப்பார்கள் என்று திருமாவளவனும், சீமானும் திசை திருப்ப பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.
கோவை: தமிழகத்தில் நிகழ்ந்து வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை திருமாவளவன் மற்றும் சீமான் உள்ளிட்டோர் திசை திருப்ப பார்ப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த இந்து இளைஞர் முன்னணியின் நகர பொறுப்பாளர் ஹரிஷின் கார கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து விட்டு தப்பிச் சென்றனர். இதேபோல் மேட்டுப்பாளையத்தில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் அரங்கேறின.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் நேரில் பார்வையிட்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,

தமிழகத்தில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு பின்னால், பெரிய கலவரத்தை உருவாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் வெளிநாட்டு சதியும் உள்ளது. பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இந்த சம்பவங்களில் இந்து முன்னணியினர், ஆர்எஸ்எஸ் அமைப்பினரே செய்துள்ளதாக அவர்கள் வழக்கை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சரியான விசாரணை செய்யாமலேயே இந்து தான் இச்செயலில் ஈடுபட்டிருப்பார் என திசை திருப்ப பார்க்கின்றனர். போலீஸார் முறையான விசாரணை செய்யவில்லை என்றால் மிகப்பெரிய கலவரம் ஏற்படும். பயங்கரவாதிகளுக்கு சிலர் உறுதுணையாக இருக்கின்றனர். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
நீலகிரி எம்பி ஆ.ராசாவின் மேட்டுப்பாளையம் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ராசா வராமல் இருப்பதே நல்லது. அவர் வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த இந்து இளைஞர் முன்னணியின் நகர பொறுப்பாளர் ஹரிஷின் கார கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து விட்டு தப்பிச் சென்றனர். இதேபோல் மேட்டுப்பாளையத்தில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் அரங்கேறின.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் நேரில் பார்வையிட்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,
தமிழகத்தில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு பின்னால், பெரிய கலவரத்தை உருவாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் வெளிநாட்டு சதியும் உள்ளது. பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இந்த சம்பவங்களில் இந்து முன்னணியினர், ஆர்எஸ்எஸ் அமைப்பினரே செய்துள்ளதாக அவர்கள் வழக்கை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சரியான விசாரணை செய்யாமலேயே இந்து தான் இச்செயலில் ஈடுபட்டிருப்பார் என திசை திருப்ப பார்க்கின்றனர். போலீஸார் முறையான விசாரணை செய்யவில்லை என்றால் மிகப்பெரிய கலவரம் ஏற்படும். பயங்கரவாதிகளுக்கு சிலர் உறுதுணையாக இருக்கின்றனர். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
நீலகிரி எம்பி ஆ.ராசாவின் மேட்டுப்பாளையம் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ராசா வராமல் இருப்பதே நல்லது. அவர் வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.