வால்பாறை எஸ்டேட் பகுதியில் மருந்து தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை தாக்கியதில், காயமடைந்த நபரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் தேயிலை தோட்ட தொழிலாளி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை அருகேயுள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் 44வது தேயிலை தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள், இன்று பிற்பகல் உணவுக்கு பின்னர் மீண்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த சின்னமுருகன் (52) என்பவரை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளது.

இதில் உடல் முழுவதும் நகங்களால் கிரியதால், அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சக உழியர்கள், காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வனவிலங்குகள் காட்டு பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க வேண்டும் என வனத்துறைக்கு, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேயிலை தோட்ட தொழிலாளியை சிறுத்தை தாக்கிய சம்பவம் காரணமாக அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை அருகேயுள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் 44வது தேயிலை தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள், இன்று பிற்பகல் உணவுக்கு பின்னர் மீண்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த சின்னமுருகன் (52) என்பவரை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளது.
இதில் உடல் முழுவதும் நகங்களால் கிரியதால், அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சக உழியர்கள், காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வனவிலங்குகள் காட்டு பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க வேண்டும் என வனத்துறைக்கு, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேயிலை தோட்ட தொழிலாளியை சிறுத்தை தாக்கிய சம்பவம் காரணமாக அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.