தீபாவளியையொட்டி கோவை கோ-ஆப்டெக்சில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் துவக்கி வைத்தார்

தீபாவளி பண்டிகையையொட்டி கோவை கோ-ஆப்டெக்சில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ள நிலையில், கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் உள்ள கோ—ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று தொடங்கி வைத்தார்.



கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி கோவை கோ-ஆப்டெக்சில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.

கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ—ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்சில் சிறப்பு தள்ளுபடியில் ஆடைகள் விற்பனை செய்யபட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் தீபாவளியையொட்டி சிறப்பு விற்பனைக்காக, பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.



தீபாவளியையொட்டி இந்தாண்டு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, தள்ளுபடி விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், கோ ஆப்டெக்ஸ் நிர்வாக குழு இயக்குனர் ரமேஷ் மற்றும் தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆண்டு கோவை மாவட்ட கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் ஒன்பது கோடியே 10 லட்சத்திற்கு விற்பனை குறியீடு எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...