தீபாவளியையொட்டி கோவை கோ-ஆப்டெக்சில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் துவக்கி வைத்தார்

தீபாவளி பண்டிகையையொட்டி கோவை கோ-ஆப்டெக்சில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ள நிலையில், கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் உள்ள கோ—ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று தொடங்கி வைத்தார்.



கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி கோவை கோ-ஆப்டெக்சில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.

கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ—ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்சில் சிறப்பு தள்ளுபடியில் ஆடைகள் விற்பனை செய்யபட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் தீபாவளியையொட்டி சிறப்பு விற்பனைக்காக, பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.



தீபாவளியையொட்டி இந்தாண்டு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, தள்ளுபடி விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், கோ ஆப்டெக்ஸ் நிர்வாக குழு இயக்குனர் ரமேஷ் மற்றும் தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆண்டு கோவை மாவட்ட கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் ஒன்பது கோடியே 10 லட்சத்திற்கு விற்பனை குறியீடு எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...