குறிச்சி பிரிவு பகுதியில் கட்டிடம் ஒன்றில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனரை மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அகற்றிவிட்டு, உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதமும் விதித்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் OHT ஊராட்சி ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் OHT ஆபரேட்டர்களுக்கு தணிக்கை ஆட்சேபனை என ஊதியத்தை குறைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
OHT ஆபரேட்டர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுப்படி ஊதிய நிர்ணயத்தை வழங்கிட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவை தொகையுடன் வழங்கிட வேண்டும், தூய்மை காவலர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி ஊராட்சிகள் மூலம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.