வார்டு எண். 94-ல் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்; ரூ.5,000 அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்..!

குறிச்சி பிரிவு பகுதியில்‌ கட்டிடம் ஒன்றில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனரை மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அகற்றிவிட்டு, உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதமும் விதித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண்‌.94-க்கு உட்பட்ட பகுதியில்‌ அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை அகற்றிய அதிகாரிகள், உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதித்துள்ளனர்.



கோவை மாநகராட்சி வார்டு எண்‌ 94-க்கு உட்பட்ட பொள்ளாச்சி பிரதான சாலை, குறிச்சி பிரிவு பகுதியில்‌ ஒரு கட்டிடத்தில்‌ அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள்‌ (Hoardings) வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ உத்தரவின் பேரில், உதவி நகரமைப்பு அலுவலர்‌ சத்யா தலைமையிலான அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்ற குறிப்பிட்ட விளம்பர பேனரை அகற்றினர்.



இதனையடுத்து, அனுமதியின்றி விளம்பர பேனரை வைத்த உரிமையாளருக்கு, ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.

மேலும்‌, கோவை மாநகராட்சியில்‌ வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள்‌ உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும், மீறினால்‌ அவர்கள்‌ மீது சட்டப்படி அபராதம்‌ விதித்து வழக்கு தொடரப்படும்‌ என மாநகராட்சி ஆணையர் பிரதாப்‌ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...