ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் அறிக்கையின்படி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு தயார் செய்யப்பட்ட அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் ஆளுநர் ஒப்புதல் பெற்று விரைவில் நடைமுறைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு, தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக, தமிழக அரசுக்கு அறிவுரை வழங்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவானது கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி தங்களது ஆய்வறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கை அதே நாளில், அமைச்சரவையின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இதனையடுத்து, பள்ளி மாணவர்களிடம் ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தி உள்ள தாக்கம் குறித்து, பள்ளிக் கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு மற்றும் பொது மக்களிடம் இ - மெயில் வழியே பெறப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்பட்டன.
அவற்றின் அடிப்படையில், சட்டத் துறை ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் கடந்த ஆகஸ்டு 29ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில், அவசர சட்டத்தை மேலும் செம்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, செம்மைப்படுத்தப்பட்ட அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று (26.09.2022) நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம், அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த அவசர சட்டத்துக்கு, ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் நடைமுறைக்கு வரும் என உள்துறை செயலர் பணீந்தர ரெட்டி தெரிவித்துள்ளார்.
கூட்டம் நிறைவடையும் நேரத்தில், அமைச்சர்களிடம் பேசிய முதல்வர், சர்ச்சைக்குரிய முறையில் பேசுவதை தவிர்க்கும்படி, அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக, தமிழக அரசுக்கு அறிவுரை வழங்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவானது கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி தங்களது ஆய்வறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கை அதே நாளில், அமைச்சரவையின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இதனையடுத்து, பள்ளி மாணவர்களிடம் ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தி உள்ள தாக்கம் குறித்து, பள்ளிக் கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு மற்றும் பொது மக்களிடம் இ - மெயில் வழியே பெறப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்பட்டன.
அவற்றின் அடிப்படையில், சட்டத் துறை ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் கடந்த ஆகஸ்டு 29ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில், அவசர சட்டத்தை மேலும் செம்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, செம்மைப்படுத்தப்பட்ட அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று (26.09.2022) நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம், அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த அவசர சட்டத்துக்கு, ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் நடைமுறைக்கு வரும் என உள்துறை செயலர் பணீந்தர ரெட்டி தெரிவித்துள்ளார்.
கூட்டம் நிறைவடையும் நேரத்தில், அமைச்சர்களிடம் பேசிய முதல்வர், சர்ச்சைக்குரிய முறையில் பேசுவதை தவிர்க்கும்படி, அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.