கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டி பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து, பாஜக மாநில தலைவர் தலைமையில் கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கோவையில் மாபெரும் கண்டன நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.



அதன்படி, இன்று 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்பாட்டத்தில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், முன்னாள் எம்.பி சிபி.ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் என கலந்து கொண்டனர்.



கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு, கொடுமுடி, திருப்பூர், அவினாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திரளாக வந்திருந்தனர்.



தமிழகத்தில் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது என்று கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.



சமீபத்தில், கோவையில் நடந்த அசம்பாவித சம்பவங்களை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, சிவானந்தா காலனி, டாடபாட், 100 அடி ரோடு ஆகிய பகுதிகளில் இன்று மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றங்களை போலீசார் அறிவித்துள்ளனர்.



ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...