மேட்டுப்பாளையம் அருகே வாழை, அவரை பயிர்களை சேதப்படுத்திய யானை, மான்கள் கூட்டம் - தலா ரூ.30,000 இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை..!

ஆதிமதையனூர் கிராமத்தில் மான்கள் மற்றும் யானைக் கூட்டம் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் அவரை பயிர்களை சேதப்படுத்தியதால் வேதனையில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு தலா ரூ.30,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காடு அருகே உள்ளது ஆதிமதையனூர் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

அடர்ந்த வனத்தையொட்டி இருக்கும் இந்த கிராமத்தில் அடிக்கடி சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருகின்றன. அவ்வாறு வரும் வனவிலங்குகள் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் உள்ள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருவதும் தொடர் கதையாக உள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக இந்த பகுதியில் 8 காட்டு யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்து வருகிறது. இந்த யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆதிமதையனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அய்யாசாமி, செந்தில்குமார், ஸ்ரீதர், சுலோச்சனா ஆகியோர் அப்பகுதியில் உள்ள தங்களது விளைநிலங்களில் வாழை பயிரிட்டுள்ளனர். நேற்று இரவு இந்த விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அங்கு பயிரிடப்பட்டிருந்த 1000-கும் மேற்பட்ட வாழை பயிர்களை தின்றும், பிடுங்கி எறிந்தும் சேதப்படுத்தியுள்ளன.

இதேபோல், அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார், ராமசாமி, கிருஷ்ணசாமி, தம்பு, ராஜேந்திரன் ஆகியோரின் விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த அவரை மொச்சை பயிர்களை மான்கள் கூட்டம் சேதப்படுத்தியுள்ளன.

இதனால் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் சுமார் 30 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், வனத்துறையினர் தங்கள் பகுதிகளில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றும், சேதம் அடைந்த பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...