கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் பகுதியில் கர்ப்பிணியின் பாதுகாப்பை கருதி வீட்டிலேயே பிரசவம் பார்த்து தாய் சேய் இருவரையும் காப்பாற்றிய மருத்துவ குழுவை சேர்ந்த முருகன் மற்றும் பாண்டி என இருவருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
கோவை: கருமத்தம்பட்டி அருகே பனிக்குடம் உடைந்து வலியில் தவித்து வந்த கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் கைலாஷ் - பேபி தேவி தம்பதி. நிறைமாத கர்ப்பிணியான பேபிதேவிக்கு, நேற்றிரவு வீட்டில் பனிக்குடம் உடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் பிரசவ வலியில் துடித்துள்ளார்.
இந்நிலையில், அவரது கணவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் விரைந்து வந்துள்ளது. அப்போது, ஆம்புலன்சில் இருந்த மருத்துவர் மற்றும் உதவியாளர் அப்பெண்ணை பரிசோதித்து பார்க்கையில், பேபிதேவிக்கு பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்துள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது ஆபத்து என கருதிய ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் முருகன் மற்றும் உதவியாளர் பைலட் பாண்டி உதவியுடன் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
இதில், அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாய், சேய் என இருவரையும் சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று சேர்த்தனர். தாய் மற்றும் சேயை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவசரம் மற்றும் பாதுகாப்பு கருதி வீட்டிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் குழுவினருக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
கோவை கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் கைலாஷ் - பேபி தேவி தம்பதி. நிறைமாத கர்ப்பிணியான பேபிதேவிக்கு, நேற்றிரவு வீட்டில் பனிக்குடம் உடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் பிரசவ வலியில் துடித்துள்ளார்.
இந்நிலையில், அவரது கணவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் விரைந்து வந்துள்ளது. அப்போது, ஆம்புலன்சில் இருந்த மருத்துவர் மற்றும் உதவியாளர் அப்பெண்ணை பரிசோதித்து பார்க்கையில், பேபிதேவிக்கு பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்துள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது ஆபத்து என கருதிய ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் முருகன் மற்றும் உதவியாளர் பைலட் பாண்டி உதவியுடன் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
இதில், அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாய், சேய் என இருவரையும் சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று சேர்த்தனர். தாய் மற்றும் சேயை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவசரம் மற்றும் பாதுகாப்பு கருதி வீட்டிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் குழுவினருக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.