கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திச் செல்ல முயன்ற ஆரோக்கிய மேரி என்ற பெண்ணை மருத்துவமனை காவலாளிகள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தையை திருடிச் செல்ல முயன்ற பெண்ணை காவலாளிகள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் அன்னூரை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் குழந்தையை தொட்டிலில் படுக்க விட்டு, அந்த பெண் வெளியே சென்ற போது, அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென்று அந்த பச்சிளம் ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியே செல்ல முயன்றார்.
இதை பார்த்து சந்தேகம் அடைந்த காவலாளிகள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அந்த பெண், மருத்துவர் குழந்தையை தூக்கி வர சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனிடையே, வெளியே சென்ற குழந்தையின் தாய் திரும்பி வந்தபோது தொட்டிலில் குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். மேலும், அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் தனது குழந்தையை காணவில்லை என்று கூறியுள்ளார்.
இதையறிந்து, உஷாரான காவலாளிகள் உடனடியாக விரைந்து செயல்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற பெண்ணை மடக்கி பிடித்தனர். பின்னர் பச்சிளம் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்து விட்டு அந்த பெண்ணை பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண், கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கியமேரி (32) என்பது தெரியவந்தது. பச்சிளம் குழந்தையை அரசு மருத்துவமனையில் இருந்து திருடிய பெண் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில், பொள்ளாச்சியில் பச்சிளம் குழந்தையை கடத்திய கேரள பெண்ணை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை திருட நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் அன்னூரை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் குழந்தையை தொட்டிலில் படுக்க விட்டு, அந்த பெண் வெளியே சென்ற போது, அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென்று அந்த பச்சிளம் ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியே செல்ல முயன்றார்.
இதை பார்த்து சந்தேகம் அடைந்த காவலாளிகள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அந்த பெண், மருத்துவர் குழந்தையை தூக்கி வர சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனிடையே, வெளியே சென்ற குழந்தையின் தாய் திரும்பி வந்தபோது தொட்டிலில் குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். மேலும், அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் தனது குழந்தையை காணவில்லை என்று கூறியுள்ளார்.
இதையறிந்து, உஷாரான காவலாளிகள் உடனடியாக விரைந்து செயல்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற பெண்ணை மடக்கி பிடித்தனர். பின்னர் பச்சிளம் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்து விட்டு அந்த பெண்ணை பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண், கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கியமேரி (32) என்பது தெரியவந்தது. பச்சிளம் குழந்தையை அரசு மருத்துவமனையில் இருந்து திருடிய பெண் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில், பொள்ளாச்சியில் பச்சிளம் குழந்தையை கடத்திய கேரள பெண்ணை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை திருட நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.