கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை திருடிய பெண் - கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த மருத்துவமனை காவலாளிகளுக்கு பாராட்டு..!

கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திச் செல்ல முயன்ற ஆரோக்கிய மேரி என்ற பெண்ணை மருத்துவமனை காவலாளிகள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தையை திருடிச் செல்ல முயன்ற பெண்ணை காவலாளிகள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் அன்னூரை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நேற்று மதியம் குழந்தையை தொட்டிலில் படுக்க விட்டு, அந்த பெண் வெளியே சென்ற போது, அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென்று அந்த பச்சிளம் ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியே செல்ல முயன்றார்.

இதை பார்த்து சந்தேகம் அடைந்த காவலாளிகள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அந்த பெண், மருத்துவர் குழந்தையை தூக்கி வர சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதனிடையே, வெளியே சென்ற குழந்தையின் தாய் திரும்பி வந்தபோது தொட்டிலில் குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். மேலும், அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் தனது குழந்தையை காணவில்லை என்று கூறியுள்ளார்.

இதையறிந்து, உஷாரான காவலாளிகள் உடனடியாக விரைந்து செயல்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற பெண்ணை மடக்கி பிடித்தனர். பின்னர் பச்சிளம் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்து விட்டு அந்த பெண்ணை பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண், கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கியமேரி (32) என்பது தெரியவந்தது. பச்சிளம் குழந்தையை அரசு மருத்துவமனையில் இருந்து திருடிய பெண் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில், பொள்ளாச்சியில் பச்சிளம் குழந்தையை கடத்திய கேரள பெண்ணை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை திருட நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...