கோவை பாதுகாப்பு குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்து - 2 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் போலீசார் வழக்குப்பதிவு..!

மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, டுவிட்டரில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த இருவர் மீது கோவை சைபர் போலீசார் தாமாக முன் வந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தின் பாதுகாப்பு குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பாஜக, இந்து அமைப்பினர் வீடுகள், கார்கள்மீது எரிபொருள் வீசப்பட்ட சம்பவங்களால் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால், கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

கடந்த 22, 23ஆம் தேதிகளுக்கு பிறகு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல், கோவை மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பி உள்ள நிலையில், மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படும் விதமாக தவறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், கோவையின் பாதுகாப்பு குறித்தும், அரசு குறித்தும், இரண்டு பிரிவுகளிடையே விரோத்தை தூண்டும் வகையில், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பிரச்சனையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் இருவர் அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தாமாக முன்வந்து, அவதூறு கருத்துகளை பதிவு செய்த covaibalu73, prasant61035623 ஆகிய டிவிட்டர் கணக்கு உரிமையாளர் மீது ஆபாசமாக பேசுதல், இணையத்தில் மிரட்டல் விடுத்தல், மற்றும் ஐடி act, ( 294(b), 507, 67 it act என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த கணக்குகளின் உரிமையாளர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...