வெடத்தலாங்காடு பகுதியில் உள்ள செல்வ கணபதி கோவிலில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாததன் காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறியதாகவும், மதில் சுவரை ஏறி குதித்து மர்ம நபர்கள், உண்டியலை திருடிச் சென்று இருக்கலாம் என போலீசார் தகவல்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கருவம்பாளைம் அருகே செல்வகணபதி கோவில் உண்டியலை மர்ம நபர்கள்திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருவம்பாளையம் அருகேயுள்ள வெடத்தலாங்காடு பகுதியில்ஸ்ரீ செல்வ கணபதிகோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பணியாற்றி வரும் கோபிநாத் என்பவர் நேற்றிரவு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை மீண்டும் கோவிலை திறந்து பார்த்த போது கருவறை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழுவை சேர்ந்த பழனிச்சாமி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து விரைந்து சென்ற திருப்பூர் மத்திய போலீசார், உண்டியல் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், கோவில் உண்டியலில் 10 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும், கோவிலில்சிசிடிவி கேமரா பொருத்தப்படாததன் காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறியதாகவும், மதில் சுவரை ஏறி குதித்து மர்ம நபர்கள், உண்டியலைதிருடிச் சென்று இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.