மத்திய அரசின் பட்ஜெட் குறித்து டிஐஇ தலைவர் கருத்து


மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள பட்ஜெட் குறித்து டிஐஇ தலைவர் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் அதிக அளவில் தேசிய ஊரக வளர்ச்சி, கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு ஒதுக்கீடு செய்திருப்பது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். வேலைவாய்ப்புகள் அதிகம் ஏற்படுத்தும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் லாபத்திற்கு முதல் 5 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கு வரிகட்ட தேவையில்லை என்பதில் தற்போது முதல் 7 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கு வரி கட்டதேவையில்லை என்று மாற்றம் கொண்டுவந்திருப்பது நல்ல அம்சம். 

ரூ.50 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுக்கான வருமானவரி 30 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ரூ.2 கோடி வரை விற்பனை செய்யும் சிறுதொழில் அமைப்புக்கள் உத்தேச வருமானமாக விற்பனயில் 8 சதவிகிதம்  கணக்கிட்டு அதற்கு வரிசெலுத்த முடியும்.

இதை டிஜிட்டல் முறையிலோ வங்கிக்கணக்கு மூலமாகவோ செய்யப்பட்டால் 6 சதவிகிதம்  மட்டுமே வருமானமாகக் கருதப்பட்டு அதற்கு வரிசெலுத்தினால் போதும்.

ரூ.2 கோடி வரை விற்பனை உள்ளவர்களுக்கு கட்டாயத் தணிக்கை இல்லை. நீண்டகால சொத்து லாபக்கணக்கீடு 3 ஆண்டுகளுலிருந்து 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது நல்ல பலன்தரும்.

ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத வருமானவரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் கூடுதலாக 10 சதவிகிதம் உபரி வரி செலுத்த வேண்டும். வருமான வரி விகிதத்தைக் குறைத்திருக்கலாம். வருமான வரிச் சேமிப்புத் திட்டத்தின் அதிகபட்ச அளவை உயர்த்தாதது ஏமாற்றம்.

கருப்புப்பணத்தை ஒழிக்க பல நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் ரூ.2000 மேல் நன்கொடையை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில் தான் பெறவேண்டும். இதற்கான ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும். டிஜிட்டல் முறையில் நடைபெறப்படும் பரிவர்த்தனைகளுக்கு சேவைக்கட்டணத்தை முற்றிலும் நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...