எம்பி ஆ ராசா சனாதன குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி பேசியதாக கலவரத்தை உண்டாக்க பார்க்கின்றனர். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டு கால தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
கோவை: கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா. முத்தரசன் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எம்பி ஆ ராசா சனாதன குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி பேசியதாக கலவரத்தை உண்டாக்க பார்க்கின்றனர். மத்திய அரசின் சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு பாட திட்டத்தில் சனாதன பற்றி மேல் ஜாதி, கீழ் சாதி என படத்தோடு உள்ளது.இ தற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
பாடப்புத்தகத்திலிருந்து இதனை நீக்கவில்லை என்றால் இந்த பாட திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்க வேண்டிய சூழ்நிலை வரும்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து தற்போது உள்ள திமுக ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருகிறது. கோவை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்ற அனைத்து இடத்திலும் சிசிடிவி காட்சிகளின் அடிபடையில் உண்மையை கண்டறிந்து ,எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்றாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, காலம் தாமதம் இல்லாமல் தமிழக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணாமலை வன்முறையை தூண்டும் கூடிய வகையில் பேசுகிறார்.இவரது பேச்சு சமூக விரோதிகளுக்கு ஊக்கமாளிப்பதாக உள்ளது
அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளை முன்னிட்டு காந்தியை சுட்டிக் கொன்ற நபரின் அமைப்பை சேர்ந்தவர்கள் பேரணி நடத்த சென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதனை கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது பேசிய அவர், எம்பி ஆ ராசா சனாதன குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி பேசியதாக கலவரத்தை உண்டாக்க பார்க்கின்றனர். மத்திய அரசின் சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு பாட திட்டத்தில் சனாதன பற்றி மேல் ஜாதி, கீழ் சாதி என படத்தோடு உள்ளது.இ தற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
பாடப்புத்தகத்திலிருந்து இதனை நீக்கவில்லை என்றால் இந்த பாட திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்க வேண்டிய சூழ்நிலை வரும்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து தற்போது உள்ள திமுக ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருகிறது. கோவை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்ற அனைத்து இடத்திலும் சிசிடிவி காட்சிகளின் அடிபடையில் உண்மையை கண்டறிந்து ,எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்றாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, காலம் தாமதம் இல்லாமல் தமிழக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாமலை வன்முறையை தூண்டும் கூடிய வகையில் பேசுகிறார்.இவரது பேச்சு சமூக விரோதிகளுக்கு ஊக்கமாளிப்பதாக உள்ளது
அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளை முன்னிட்டு காந்தியை சுட்டிக் கொன்ற நபரின் அமைப்பை சேர்ந்தவர்கள் பேரணி நடத்த சென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதனை கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.