தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து திமுக ஆட்சியை கவிழ்க பாஜக முயற்சி - சி. பி.ஐ செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு.

எம்பி ஆ ராசா சனாதன குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி பேசியதாக கலவரத்தை உண்டாக்க பார்க்கின்றனர். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டு கால தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


கோவை: கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா. முத்தரசன் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், எம்பி ஆ ராசா சனாதன குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி பேசியதாக கலவரத்தை உண்டாக்க பார்க்கின்றனர். மத்திய அரசின் சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு பாட திட்டத்தில் சனாதன பற்றி மேல் ஜாதி, கீழ் சாதி என படத்தோடு உள்ளது.இ தற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

பாடப்புத்தகத்திலிருந்து இதனை நீக்கவில்லை என்றால் இந்த பாட திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்க வேண்டிய சூழ்நிலை வரும்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து தற்போது உள்ள திமுக ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருகிறது. கோவை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்ற அனைத்து இடத்திலும் சிசிடிவி காட்சிகளின் அடிபடையில் உண்மையை கண்டறிந்து ,எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்றாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, காலம் தாமதம் இல்லாமல் தமிழக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



அண்ணாமலை வன்முறையை தூண்டும் கூடிய வகையில் பேசுகிறார்.இவரது பேச்சு சமூக விரோதிகளுக்கு ஊக்கமாளிப்பதாக உள்ளது

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளை முன்னிட்டு காந்தியை சுட்டிக் கொன்ற நபரின் அமைப்பை சேர்ந்தவர்கள் பேரணி நடத்த சென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதனை கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...