கோவை எஸ்.டி.பி.ஐ நிர்வாகி மீது தாக்குதல்: இந்து அமைப்பினர் இருவர் கைது.

இரு தினங்களுக்கு மூன்பு கண்ணப்ப நகரில், ஜவருல்லா என்ற எஸ்டிபிஐ நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தில் இந்து அமைப்பை சேர்ந்த படையப்பா மற்றும் நந்த பிரகாஷ் என்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



கோவை: கோவை கண்ணப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜபருல்லா (42). இவர் எஸ்.டி.பி.ஐ (இந்திய சமூக ஜனநாயகக் கட்சி) நிர்வாகியாகஇருந்து வருகிறார்.

இரு தினங்களுக்கு முன்பு, அவருக்கும் அவரின் வீட்டின் அருகே அதே பகுதியில் உள்ளஇந்து முன்னணியை சேர்ந்தவிக்னேஷ் மற்றும் பாரத் சேனா அமைப்பை சேர்ந்த படையப்பா (28), நந்த பிரகாஷ் (27) ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, இந்து அமைப்பை சேர்ந்த மூவரும், எஸ்.டி.பி.ஐ அமைப்பைச் சேர்ந்த ஜபருல்லாவை தாக்கினர். ஜபருல்லாவும்இந்து அமைப்பினரைதாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்து முன்னணியை சேர்ந்தவிக்னேஷும், எஸ்.டி.பி.ஐ ஐபருல்லாவும்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குஅனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக ரத்தினபுரி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, ஜபருல்லா கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்து முன்னணி மற்றும் பாரத் சேனா அமைப்பை சேர்ந்த படையப்பா, விக்னேஸ், நந்த பிரகாஷ் ஆகியோர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் , ஆயுதங்களால் காயம் ஏற்படுத்தல், ஆபாசமாக பேசுதல், பொது சொத்துக்களை சேதம் விளைவித்தல் என 294(b), 323, 324, 327, 506(ii) ஆகிய 6 பிரிவுகளில் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்புச்) சட்டத்திற்கு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதே போல, இந்து முன்னணியைச் சேர்ந்த விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் , எஸ்.டி.பி.ஐ அமைப்பை சேர்ந்த ஜபருல்லா மீது கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜபருல்லா கொடுத்த புகாரின் பெயரில் பாரத் சேனாவை சேர்ந்த படையப்பா, நந்த பிரகாஷ்ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவமானது இரு பிரிவினருக்கிடையே நடந்த தாக்குதல் இல்லை என்றும் அவர்களுக்கு இடையே இருந்த தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...