சோலையாறு, சோலையாறு அணை, முடிஸ், சின்கோனா ஆகிய பகுதியில் உள்ள மசூதிகள் மற்றும் வால்பாறை பாஜக அலுவலகம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் உள்ள மசூதி மற்றும் பாஜக அலுவலகம் அருகே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளில் கார் மற்றும் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் எதிரொளியாக, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சோலையாறு, சோலையாறு அணை, முடிஸ், சின்கோனா ஆகிய பகுதியில் உள்ள மசூதிகள் மற்றும் வால்பாறை உள்ள பாஜக அலுவலகம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், காவல்துறையினர் வால்பாறை பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர்.