கோவை குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அறைகளை குறிவைத்து திருட்டு

குனியமுத்தூர் பகுதிகளில் தங்கி வரும் கல்லூரி மாணவர்களின் அறைகளில் இருந்து லேப்டாப், செல்போன், பணம் ஆகியவை அடிக்கடி திருட்டு போவதாக புகார் எழுந்துள்ளது. அப்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் இருவேறு சம்பவங்களில் லேப்டாப், செல்போன், பணம் ஆகியவை திருட்டுப் போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை குனியமுத்தூர், காஸ்மோ காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான பிரேம்குமார்(19), தரணிதரன்(20) ஆகியோர் வீட்டில் செல்போன், லேப்டாப், கடிகாரம் ஆகியவையும், குனியமுத்தூர் கே.ஜி.கே ரோட்டை சேர்ந்த துரைக்கண்ணு (40) என்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 2 செல்போன் ரொக்கப்பணம் ரூபாய் 13,500 ஆகியவையும் திருட்டு போனது.

தொடர் திருட்டால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் தங்கும் அறைகளுக்கு அடிக்கடி அவர்களது நண்பர்கள் வந்து செல்வதால் அறை எப்பொழுதும் திறந்தே இருக்கும் என்றும் அவ்வாறு திருட்டுப் போனாலும் அதை பெரிதாக அவர்கள் பொருட்படுத்துவதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இந்த திருட்டு சம்பவங்களால் இப்பகுதியில் வீடுகளில் திருட்டு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டறிய அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் மேலும் இப்பகுதிகளில் ரோந்து பணிகளையும் தீவிர படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...