நோயாளிகளிடம் கனிவாக பேச வேண்டும் - மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவுரை

வார்டு12 மற்றும் 25 இல் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அப்போது, நகர்நல மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, சிகிச்சையளிக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவுறுத்தினார்.



கோவை மாநகராட்சியில் 25வது வார்டுக்கு உட்பட்ட கணபதி மாநகரில், ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுமான பணி,



21வது வார்டு விநாயகபுரம் பிரதான சாலையில், ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் 12-வது வார்டுக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டியில், 25 லட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டுமான பணிகளை, மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு செய்தார்.



அப்போது பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து வெள்ளக்கிணறு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, தரமான சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார்.



இதனையடுத்து வடக்கு மண்டலம், கே.என்.ஜி.புதுார் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை பார்வையிட்ட ஆணையர், மாணவ, மாணவியரிடம் வாசிப்பு திறனை மேம்படுத்த அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வு பணியில் போது உதவி ஆணையர் மோகன சுந்தரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...