வார்டு12 மற்றும் 25 இல் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அப்போது, நகர்நல மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோவை: மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, சிகிச்சையளிக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சியில் 25வது வார்டுக்கு உட்பட்ட கணபதி மாநகரில், ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுமான பணி,

21வது வார்டு விநாயகபுரம் பிரதான சாலையில், ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் 12-வது வார்டுக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டியில், 25 லட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டுமான பணிகளை, மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து வெள்ளக்கிணறு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, தரமான சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து வடக்கு மண்டலம், கே.என்.ஜி.புதுார் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை பார்வையிட்ட ஆணையர், மாணவ, மாணவியரிடம் வாசிப்பு திறனை மேம்படுத்த அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வு பணியில் போது உதவி ஆணையர் மோகன சுந்தரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சியில் 25வது வார்டுக்கு உட்பட்ட கணபதி மாநகரில், ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுமான பணி,
21வது வார்டு விநாயகபுரம் பிரதான சாலையில், ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் 12-வது வார்டுக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டியில், 25 லட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டுமான பணிகளை, மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து வெள்ளக்கிணறு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, தரமான சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து வடக்கு மண்டலம், கே.என்.ஜி.புதுார் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை பார்வையிட்ட ஆணையர், மாணவ, மாணவியரிடம் வாசிப்பு திறனை மேம்படுத்த அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வு பணியில் போது உதவி ஆணையர் மோகன சுந்தரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.