மின் கட்டண உயர்வு குறித்து மின்சாரத்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்தையில் ஓரிரு நாளில் சாதகமான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளதால் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று கொள்வதாக, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் புதிய மின் கட்டண உயர்வை அமலுக்கு கொண்டு வந்தது. இதற்கு தொழில் நிறுவனங்கள், நெசவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வந்தன.
இந்நிலையில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் நடந்த பேச்சுவார்தையில் ஓரிரு நாளில் சாதகமான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளதால், ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
வேலைநிறுத்த போராட்ட வாபஸ் பெறப்பட்ட நிலையில் நாளை முதல் விசைத்தறிகள் வழக்கம் போல் இயங்கும் என சங்கத்தினர் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் புதிய மின் கட்டண உயர்வை அமலுக்கு கொண்டு வந்தது. இதற்கு தொழில் நிறுவனங்கள், நெசவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வந்தன.
இந்நிலையில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் நடந்த பேச்சுவார்தையில் ஓரிரு நாளில் சாதகமான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளதால், ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
வேலைநிறுத்த போராட்ட வாபஸ் பெறப்பட்ட நிலையில் நாளை முதல் விசைத்தறிகள் வழக்கம் போல் இயங்கும் என சங்கத்தினர் கூறியுள்ளனர்.