மின் கட்டண உயர்வுக்கு எதிரான வேலைநிறுத்தம் வாபஸ் - கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

மின் கட்டண உயர்வு குறித்து மின்சாரத்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்தையில் ஓரிரு நாளில் சாதகமான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளதால் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று கொள்வதாக, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் புதிய மின் கட்டண உயர்வை அமலுக்கு கொண்டு வந்தது. இதற்கு தொழில் நிறுவனங்கள், நெசவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வந்தன.

இந்நிலையில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் நடந்த பேச்சுவார்தையில் ஓரிரு நாளில் சாதகமான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளதால், ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

வேலைநிறுத்த போராட்ட வாபஸ் பெறப்பட்ட நிலையில் நாளை முதல் விசைத்தறிகள் வழக்கம் போல் இயங்கும் என சங்கத்தினர் கூறியுள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...