கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு: ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்..!

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஏடிஜிபி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவையில் கடந்த இரண்டு தினங்களாக பாஜக தலைமை அலுவலகம், ஒப்பணக்காரர் வீதியில் உள்ள தனியார் துணிக்கடை மற்றும் பாஜக, இந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி செல்கின்றனர்.

இந்தத் தொடர் சம்பவங்களால் கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் முக்கிய சாலைகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் மற்றும் வாகன சோதனை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் ரோந்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் மாநகரில் 5 இடங்களிலும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்ற வருவதால், தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.



இதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஏடிஜிபி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவையில் நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்கள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்த ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் கோவை மாநகர பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்ற பகுதிகளில் அவர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...