கோவைபுதூர் பகுதியில் இந்து அமைப்பு நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு...!

கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக கேரள கேந்திர பொருப்பாளர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கோவைபுதூர் பகுதியில் வசித்து வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக கேரள கேந்திர பொருப்பாளர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு முதல் கோவையில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் தொடர்ச்சியாக 5 வது நிகழ்வாக ஆனந்த கல்யான கிருஷ்ணனின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பியுள்ளனர்.



தகவலறிந்த குனியமுத்தூர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த வீட்டிற்கு இந்து அமைப்பினரும் திரண்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், மீண்டும் ஒரு பெட்ரோல் குண்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்ற பெற்றோர் குண்டு வீச்சு சம்பவங்களை விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று இன்று மாலை காந்திபுரம் பகுதியில் போலீசார் நடத்திய கொடி அணிவகுப்பின் போது காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

விரைவில் இந்த குற்றங்களில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர் மீது குண்டர் சட்டம் உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்காவல் ஆணையாளர் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் நிலவும் பதற்றமான சூழலை முன்னிட்டு இன்று மாலை ஏஜி டிபி தாமரைக்கண்ணன் தலைமையில் காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் உட்பட உயர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...