பழனி கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.71 கோடி வசூல் - கோவில் நிர்வாகம் தகவல்

பழனி மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக பணமாக ரூ.1.89 கோடியும், 1,968 கிராம் தங்கம், 29,438 கிராம் வெள்ளியும், 2,406 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.


திண்டுக்கல்: பழனி மலைக்கோவில் உண்டியல் காணிக்கையாக பணம், நகை மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் என மொத்தம் 2.71 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலில் உண்டியல் பெறப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணி கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கியது. தற்போது உண்டியல் என்னும் பணி முடிவடைந்த நிலையில் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

முதல் நாள் உண்டியல் எண்ணிக்கையில், ஒரு கோடியே 89 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பணமாக கிடைத்துள்ளது. மேலும், 883 கிராம் தங்கமும், 13,997 கிராம் வெள்ளியும், 2,042 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது என்றும் இரண்டாவது நாள் உண்டியல் எண்ணிக்கையில் 1085 கிராம் தங்கம், 15,441 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளது என்று அறிவித்துள்ளது.

இதன்படி, கிடைக்கப்பெற்ற தங்கம், வெள்ளி, ரொக்கம் உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு 2 கோடியே 71 லட்சத்து 48 ஆயிரத்து 290 ரூபாய் ஆகும். மேலும், 2,406 வெளிநாட்டு கரன்சிகள் பெறப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்த உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உண்டியல் என்னும் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...