பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கேரள செல்ல பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி

கேரளாவில் முழு அடைப்பு எதிரொலியாக இன்று பேருந்து சேவைகள் இயங்காததால், பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காடு, திருச்சூர் ஆகிய இடங்களுக்கு பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.


கோவை: கேரளாவில் முழு அடைப்பு எதிரொலியாக இன்று பொள்ளாச்சியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்தியா முழுவதும் நேற்று, தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள், ஃபாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை மற்றும் விசாரணை நடத்தியதில் கேரளாவில் எட்டு பேர் கோவையில் மூன்று பேர் என நாடு முழுவதும் மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை கண்டித்து நேற்று எஸ்டிபிஐ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பாக கண்டனக் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து கேரளாவில் இன்று SDPI கட்சியினர் முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி இன்று கேரளா முழுவதும் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



குறிப்பாக, பேருந்து சேவைகள் இயங்காததால் கேரளாவில் இருந்து கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களுக்கு பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

குறிப்பாக, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் போன்ற இடங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...