கோவையில் பதற்றம்: 100 அடி சாலையில் பாஜக நிர்வாகியின் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு - போலீசார் விசாரணை..!

ரத்தினபுரி மண்டல பாஜக தலைவரான மோகன் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் ஆக்சஸரீஸ் கடையில் 3வது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ரத்தினபுரி மண்டல பாஜக தலைவராக இருப்பவர் மோகன். கோவை 100 அடி சாலையில் இவருக்கு சொந்தமான வெல்டிங் ஆக்சஸரீஸ் கடை செயல்பட்டு வருகிறது.



இந்நிலையில் இன்று காலை அவரது மகன் மகேந்திரன் கடைக்கு வந்த போது, கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது.



இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பேசிய பாஜக பிரமுகர் மோகன், ஏற்கனவே கடை மீது 2 முறை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் தற்போது 3வது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது.

கடந்த இரண்டு முறை குண்டு வீசப்பட்டதில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 2 முறையும் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த முறை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கோவை நகரில் அடுத்தடுத்து பாஜக பிரமுகர்களை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வரும் சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...