உறக்கத்தில் ஸ்டேஷனில் இறங்க மறந்ததால் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தவறி விழுந்த நபரை காப்பாற்றிய ரயில்வே இருப்புப்பாதை போலீசார்...!

கோவை இரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய ரயில் பயணியான சிவக்குமார் என்பவர் தூங்கி விட்டதால், திடீரென கண்விழித்து பதற்றத்தில் ரயிலில் இருந்து குதிக்க முற்பட்டார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே இருப்புப்பாதை போலீசார் காப்பாற்றினர்.



கோவை: நேற்று இரவு கோவை ரயில் நிலைய நடைமேடையில் 23.15 மணிக்கு கோவை ரயில் நிலைய நடை மேடை எண் 3-ல் வண்டி எண் 16528 கண்ணூரில் இருந்து எஸ்வந்த்பூர் செல்லும் ரயில் வண்டியில் இருந்து தவறி விழுந்த நபரை ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் காப்பாற்றிய சம்பவம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

அந்தப் பையனையை காப்பாற்றும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சேலத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் இரயில் மூலமாக கேரளா, கண்ணூரில் இருந்து கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கோவையில் இறங்க வேண்டிய அவர் உறங்கிவிட்டதாக தெரிகிறது. அப்போது, திடீரென கண் விழித்துக் கொண்ட அவர் கோவை ரயில் நிலையத்தில் இறங்க வேண்டுமே என்ற பதற்றத்தில் ஓடும் ரயிலில் இருந்து குதிக்க முற்பட்டுள்ளார். அப்போது நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார்.



அப்போது, பணியில் ரோந்து சென்ற ரெயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் - ரமேஷ், மாரிமுத்து, மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளர் அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி, ஆகியோர் தண்டவாளத்தில் விழுந்த சிவகுமாரை கண் இமைக்கும் நேரத்தில் பெரும் அசம்பாவிதத்தில் இருந்து காப்பாற்றினர். இதனால் அதிர்ஷ்டவசமாக சிவகுமார் உயிர்தப்பினார்.

பின்னர் அவர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளான நபரை விழிப்புடன் செயல்பட்டு காப்பாற்றிய கோவை ரயில்வே காவலர்களை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...