பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக கிடந்த வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் சாலைகள் புதுப்பிக்கும் பணிகள், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில், நகராட்சி ஆணையாளர் பாலு முன்னிலையில் பூமிபூஜையுடன் துவங்கியது.
கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் புதுப்பிக்கும் பணிகள், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில் பூமி பூஜையுடன் இன்று துவங்கியது.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த சில ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் வால்பாறை நகராட்சி சார்பில் சாலைகளை புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதில் சோலையார் எஸ்டேட் முதல் சங்கிலி ரோடு எஸ்டேட் வரையிலான 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலைக்கான டெண்டர் ரூ.13.5கோடிக்கு விடப்பட்டது.
இந்நிலையில், சாலை புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில், நகராட்சி ஆணையாளர் பாலு முன்னிலையில் முடிஸ் பகுதியில் சாலையை சாலையை புதுப்பிக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணி துவக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வால்பாறை பகுதியில் உள்ள வார்டு உறுப்பினர்கள் முடிஸ் எஸ்டேட் நிர்வாகத்தினர், திமுக கட்சியினர் மற்றும் பணி செய்ய டெண்டர் எடுத்துள்ளவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த சில ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் வால்பாறை நகராட்சி சார்பில் சாலைகளை புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதில் சோலையார் எஸ்டேட் முதல் சங்கிலி ரோடு எஸ்டேட் வரையிலான 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலைக்கான டெண்டர் ரூ.13.5கோடிக்கு விடப்பட்டது.
இந்நிலையில், சாலை புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில், நகராட்சி ஆணையாளர் பாலு முன்னிலையில் முடிஸ் பகுதியில் சாலையை சாலையை புதுப்பிக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணி துவக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வால்பாறை பகுதியில் உள்ள வார்டு உறுப்பினர்கள் முடிஸ் எஸ்டேட் நிர்வாகத்தினர், திமுக கட்சியினர் மற்றும் பணி செய்ய டெண்டர் எடுத்துள்ளவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.