வால்பாறையில் நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த சாலை - புதுப்பிக்கும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்..!

பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக கிடந்த வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் சாலைகள் புதுப்பிக்கும் பணிகள், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில், நகராட்சி ஆணையாளர் பாலு முன்னிலையில் பூமிபூஜையுடன் துவங்கியது.


கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் புதுப்பிக்கும் பணிகள், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில் பூமி பூஜையுடன் இன்று துவங்கியது.



வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த சில ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் வால்பாறை நகராட்சி சார்பில் சாலைகளை புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதில் சோலையார் எஸ்டேட் முதல் சங்கிலி ரோடு எஸ்டேட் வரையிலான 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலைக்கான டெண்டர் ரூ.13.5கோடிக்கு விடப்பட்டது.

இந்நிலையில், சாலை புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில், நகராட்சி ஆணையாளர் பாலு முன்னிலையில் முடிஸ் பகுதியில் சாலையை சாலையை புதுப்பிக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணி துவக்கப்பட்டது.



இந்நிகழ்வில் வால்பாறை பகுதியில் உள்ள வார்டு உறுப்பினர்கள் முடிஸ் எஸ்டேட் நிர்வாகத்தினர், திமுக கட்சியினர் மற்றும் பணி செய்ய டெண்டர் எடுத்துள்ளவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...