கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்த சோகம்...!

பிதுர்காடு பகுதியில் சுற்றிவந்த யானை ஒன்று, பாக்கு மரத்தை முறிக்க முயன்ற போது, மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை உடல் கருகி உயிரிழந்த நிலையில், அங்கு வந்த வனத்துறையினர், யானை உடலை மீட்டு உடற்கூராய்வு செய்து அடக்கம் செய்தனர்.


நீலகிரி: கூடலூர் அருகே பிதுர்காடு பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி ஆண் யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர் அருகே உள்ள பிதுர்காடு பகுதியில் நேற்றைய தினம் ஆண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. வனப்பகுதியில் இருந்த மரங்களை முறித்து சாப்பிட்டு வந்த யானை, அங்கிருந்த பாக்கு மரத்தை தனது தலையால் மோதி சாய்க்க முயன்றது.

பாக்கு மரம் அங்கிருந்த மின் கம்பி மீது சாய்ந்த நிலையில் திடீரென மின் கம்பி அறுந்து எதிர்பாராத விதமாக யானை மீதே விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே யானை உடல் கருகி உயிரிழந்தது.

இந்நிலையில், இன்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் யானை இறந்து கிடப்பது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், யானையின் உடலை மீட்டு, அந்த இடத்திலேயே உடல் கூராய்வு செய்தனர். பின்னர் யானையின் உடலை அடக்கம் செய்தனர்.

சம்பவம் நடைபெற்ற குறிப்பிட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், மின்சார தாக்குதலில் இருந்து வன விலங்குகளை காப்பதற்காக கடந்த வாரம் வனத்துறையினரும், மின்சாரத் துறையினரும் இணைந்து ஆய்வுப்பணி மேற்கொண்ட நிலையில் அங்கு மேலும் ஒரு யானை உயிரிழந்தது வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...