பிதுர்காடு பகுதியில் சுற்றிவந்த யானை ஒன்று, பாக்கு மரத்தை முறிக்க முயன்ற போது, மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை உடல் கருகி உயிரிழந்த நிலையில், அங்கு வந்த வனத்துறையினர், யானை உடலை மீட்டு உடற்கூராய்வு செய்து அடக்கம் செய்தனர்.
நீலகிரி: கூடலூர் அருகே பிதுர்காடு பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி ஆண் யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் அருகே உள்ள பிதுர்காடு பகுதியில் நேற்றைய தினம் ஆண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. வனப்பகுதியில் இருந்த மரங்களை முறித்து சாப்பிட்டு வந்த யானை, அங்கிருந்த பாக்கு மரத்தை தனது தலையால் மோதி சாய்க்க முயன்றது.
பாக்கு மரம் அங்கிருந்த மின் கம்பி மீது சாய்ந்த நிலையில் திடீரென மின் கம்பி அறுந்து எதிர்பாராத விதமாக யானை மீதே விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே யானை உடல் கருகி உயிரிழந்தது.
இந்நிலையில், இன்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் யானை இறந்து கிடப்பது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், யானையின் உடலை மீட்டு, அந்த இடத்திலேயே உடல் கூராய்வு செய்தனர். பின்னர் யானையின் உடலை அடக்கம் செய்தனர்.
சம்பவம் நடைபெற்ற குறிப்பிட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், மின்சார தாக்குதலில் இருந்து வன விலங்குகளை காப்பதற்காக கடந்த வாரம் வனத்துறையினரும், மின்சாரத் துறையினரும் இணைந்து ஆய்வுப்பணி மேற்கொண்ட நிலையில் அங்கு மேலும் ஒரு யானை உயிரிழந்தது வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூடலூர் அருகே உள்ள பிதுர்காடு பகுதியில் நேற்றைய தினம் ஆண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. வனப்பகுதியில் இருந்த மரங்களை முறித்து சாப்பிட்டு வந்த யானை, அங்கிருந்த பாக்கு மரத்தை தனது தலையால் மோதி சாய்க்க முயன்றது.
பாக்கு மரம் அங்கிருந்த மின் கம்பி மீது சாய்ந்த நிலையில் திடீரென மின் கம்பி அறுந்து எதிர்பாராத விதமாக யானை மீதே விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே யானை உடல் கருகி உயிரிழந்தது.
இந்நிலையில், இன்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் யானை இறந்து கிடப்பது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், யானையின் உடலை மீட்டு, அந்த இடத்திலேயே உடல் கூராய்வு செய்தனர். பின்னர் யானையின் உடலை அடக்கம் செய்தனர்.
சம்பவம் நடைபெற்ற குறிப்பிட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், மின்சார தாக்குதலில் இருந்து வன விலங்குகளை காப்பதற்காக கடந்த வாரம் வனத்துறையினரும், மின்சாரத் துறையினரும் இணைந்து ஆய்வுப்பணி மேற்கொண்ட நிலையில் அங்கு மேலும் ஒரு யானை உயிரிழந்தது வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.