என்.ஐ.ஏ சோதனை என்ற பெயரில் மத்திய அரசு அடக்குமுறையை ஏவி வருவதாக கூறி காங்கயம் சாலையில் உள்ள சிடிசி டிப்போவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திருப்பூர்: நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி, நாகர்கோவில், கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், தேனி, தென்காசி உள்ளிட்ட 16 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், என்.ஐ.ஏ சோதனை என்ற பெயரில் மத்திய அரசு அடக்குமுறையை ஏவி வருவதாக கூறி திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் ஹபீபூர் ரஹ்மான் தலைமையில் காங்கயம் சாலையில் உள்ள சிடிசி டிப்போவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI மாவட்ட தலைவர் பஷீர் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி, நாகர்கோவில், கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், தேனி, தென்காசி உள்ளிட்ட 16 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், என்.ஐ.ஏ சோதனை என்ற பெயரில் மத்திய அரசு அடக்குமுறையை ஏவி வருவதாக கூறி திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் ஹபீபூர் ரஹ்மான் தலைமையில் காங்கயம் சாலையில் உள்ள சிடிசி டிப்போவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI மாவட்ட தலைவர் பஷீர் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.