வால்பாறையில் 2வது முறையாக திறக்கப்பட்ட தாவரவியல் பூங்கா - இன்று முதல் பொதுமக்களுக்கு இலவச அனுமதி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

வால்பாறையில் பணிகள் நிறைவடைவதற்கு முன்பே திறக்கப்பட்ட தாவரவியல் பூங்கா, பணிகள் நிறைவடைந்த நிலையில் 2வது முறையாக இன்று, வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


கோவை: வால்பாறையில் 2வது முறையாக திறக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆட்சியில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 4.2 ஏக்கர் இடத்தில், பொதுப்பணித் துறை சார்பில், ரூ.5 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. இந்நிலையில், பணிகள் நிறைவு பெற்று ஒரு சில வேலைகள் செய்து முடிப்பதற்கு முன்பே பூங்கா திறக்கப்பட்டது.

இந்த பூங்காவில் ஒரு சில நாட்கள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்தின் காரணமாகவும், பணி நிறைவடையாமல் இருந்ததன் காரணமாகவும் பூங்கா அப்போது மூடப்பட்டது.

தற்போது, பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தாவரவியல் பூங்கா 2வது முறையாக இன்று மீண்டும் திறக்கப்பட்டது.



பூங்காவை வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



இந்நிலையில், இன்று முதல் பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி எம்.இ.வெங்கடாசலம் மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள வார்டு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...