கோவை அரசு மருத்துவமனையில் படுக்கையை மாற்றிக் கொள்ளும்படி கேட்ட பெண் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நோயாளி சந்தோஷ்குமார், மருத்துவரை தாக்க முயன்றதுடன் தடுக்க வந்த செவிலியரை தாக்கிவிட்டு, நோட்டீஸ் போர்டையும் உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் மருத்துவர் மற்றும் செலவிலியரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருபவர் ஸ்ரீவித்யா. இவர் கடந்த 20ஆம் தேதி பகல் 3:30 மணிக்கு மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு சிகிச்சைக்கு வந்த சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஓட்டுனர் சந்தோஷ் குமார்(26) என்பவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் மருத்துவர் ஸ்ரீவித்யா, படுக்கையை மாற்றிக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார். இதனால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமார், தாக்கவும் முயற்சித்துள்ளார். அப்போது, தடுக்க முயன்ற செவிலியர் தனலட்சுமியை கடுமையாக தாக்கிய அவர், பொது அறுவை சிகிச்சை வார்டில் இருந்த நோட்டீஸ் போர்டையும் உடைத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மருத்துவர் ஸ்ரீவித்யா, ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், ஆய்வாளர் சாந்தமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணரை நோயாளி ஒருவர் தாக்கிய சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருபவர் ஸ்ரீவித்யா. இவர் கடந்த 20ஆம் தேதி பகல் 3:30 மணிக்கு மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு சிகிச்சைக்கு வந்த சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஓட்டுனர் சந்தோஷ் குமார்(26) என்பவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் மருத்துவர் ஸ்ரீவித்யா, படுக்கையை மாற்றிக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார். இதனால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமார், தாக்கவும் முயற்சித்துள்ளார். அப்போது, தடுக்க முயன்ற செவிலியர் தனலட்சுமியை கடுமையாக தாக்கிய அவர், பொது அறுவை சிகிச்சை வார்டில் இருந்த நோட்டீஸ் போர்டையும் உடைத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மருத்துவர் ஸ்ரீவித்யா, ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், ஆய்வாளர் சாந்தமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணரை நோயாளி ஒருவர் தாக்கிய சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.