படுக்கையை மாற்றச் சொன்ன விவகாரம்: கோவை அரசு பெண் மருத்துவரை தாக்கிய நோயாளி - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை..!

கோவை அரசு மருத்துவமனையில் படுக்கையை மாற்றிக் கொள்ளும்படி கேட்ட பெண் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நோயாளி சந்தோஷ்குமார், மருத்துவரை தாக்க முயன்றதுடன் தடுக்க வந்த செவிலியரை தாக்கிவிட்டு, நோட்டீஸ் போர்டையும் உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் மருத்துவர் மற்றும் செலவிலியரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருபவர் ஸ்ரீவித்யா. இவர் கடந்த 20ஆம் தேதி பகல் 3:30 மணிக்கு மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு சிகிச்சைக்கு வந்த சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஓட்டுனர் சந்தோஷ் குமார்(26) என்பவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மருத்துவர் ஸ்ரீவித்யா, படுக்கையை மாற்றிக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார். இதனால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமார், தாக்கவும் முயற்சித்துள்ளார். அப்போது, தடுக்க முயன்ற செவிலியர் தனலட்சுமியை கடுமையாக தாக்கிய அவர், பொது அறுவை சிகிச்சை வார்டில் இருந்த நோட்டீஸ் போர்டையும் உடைத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மருத்துவர் ஸ்ரீவித்யா, ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், ஆய்வாளர் சாந்தமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணரை நோயாளி ஒருவர் தாக்கிய சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...