வார்டு 61: எங்களுக்கு வேலை சொல்ல கவுன்சிலரின் கணவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது..? - தூய்மை பணியாளர்கள் கண்டனம்.

திமுக கவுன்சிலர் ஆதி மகேஸ்வரியின் கணவர் திராவிட மணி என்பவர் சுகாதார அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களிடம் அதிகார தோரணையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சிதேர்தலில்வெற்றி பெற்ற சில பெண் வேட்பாளர்கள் பெயர் அளவுக்கு தான் கவுன்சிலர்கள், மற்றபடி வார்டில் ஆய்வு செய்து முடிவுகள் எடுப்பது போன்ற வேலைகளை கட்சியில் இருக்கும் அவர்கள் கணவர்கள் தான் செய்து வருவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்து வரும் நிலையில், அதை நிரூபிக்கும் படியான சம்பவம் கோவையில் நடைபெற்றுள்ளது.

கோவை மாநகராட்சியின் 61வது வார்டுக்குட்பட்ட சுகாதார அலுவலகத்தில் திமுக கவுன்சிலரின் கணவர், அதிகார தோரணையில், பணியாளர்களிடம் நடந்து கொண்டது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாநகராட்சியின் 61 வது வார்டில் திமுக சார்பில் கவுன்சிலராக இருப்பவர் ஆதி மகேஸ்வரி. இவரது கணவர் திராவிட மணி. இவர் நேற்று அதிகாலை சுமார் 6 மணியளவில் 61வது வார்டுக்கு உட்பட்ட சுகாதார அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு, அதிகார தோரணையில் சுகாதாரப் பணியாளர்களின் வருகை பதிவேட்டை எடுத்து ஆய்வு செய்து

சுகாதார பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், "சுகாதார பணியாளர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன், நான் சொல்லும் வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும்" என கூறியதாககுற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கவுன்சிலரின் கணவருக்கு மாநகராட்சி வேலைகளில் தலையிட யார் அதிகாரம் கொடுத்தது? இவர் சுகாதார ஆய்வாளரா? இல்லை மண்டல ஆய்வாளரா?என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தினர், முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் குறித்துமாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டுள்ளனர்.

கண்டிக்கத்தக்க இந்த விவகாரத்தில்மாநகராட்சி ஆணையர் தலையிட்டுஇது போன்ற சம்பவங்கள் மற்ற வார்டுகளில் நடைபெறாமல் இருக்க தகுந்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...